மழை நீரில் டாஸ் போடும் இந்தியா நியுஸி., கேப்டன்களின் மீம்ஸ்...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. வழக்கத்திற்கு மாறாக பிரிட்டனில் பேய் மழை பெய்து வருகிறது. முதல் 10 ஆட்டத்தில் மழை, மேகத்தில் நின்று ரசிகர் போல போட்டியை ரசித்தது. அந்த விதம் மழைக்கு போரடிக்க வீரர்களுடன் இணைந்து விளையாட ஆசைப்பட்டு மைதானத் திற்கு களமிறங்கியது. இதன் விளைவு மைதானம் வெள்ளக் காடாக மாறி போட்டிக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. வானிலை பற்றி யோசிக்காமல் இங்கிலாந்து நாடு உலகக் கோப்பையை தொடரை நடத்த உத்தரவிட்ட சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தொலைநோக்கு இல்லா திட்டத்தால் வீரர்களை விட ரசிகர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். போட்டியைக் காண பல லட்சம் செலவு செய்து இங்கிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு ரசிகர்கள் போட்டியை ரசிக்க முடியாத ஏக்கத்தி னால் மீம்ஸ் மூலம் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தை (ஐசிசி) எண்ணெய் இல்லாமல் வறுத்தெடுத்து வருகின்றனர். வியாழனன்று சம பலம் உடைய இந்தியா - நியூஸிலாந்து ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்திய ரசிகர் ஒருவர் கிரிக்கெட் போட்டியை நீக்கிவிட்டு நீச்சல் போட்டியை நடத்த ஐசிசிக்கு மீம்ஸ் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.