tamilnadu

img

கொரோனா பரவல் எதிரொலி... உலக செஸ் சாம்பியன்ஷிப் தள்ளிவைப்பு

துபாய் 
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 10-வது சீசன் வரும் டிசம்பர் மாதம் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த தொடர் நடப்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், உலக செஸ் சாம்பியன்ஷிப்  தொடரை அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்படுவதாக  சர்வதேச செஸ் சம்மேளன தலைவர் அர்காடி டிவோர்கோவிச் அறிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்த விரிவான விரைவில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.    

ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ்  போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே தள்ளிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

;