tamilnadu

img

மாறுபட்ட வளர்ச்சியில் டென்னிஸ்... - சதீஸ் முருகேசன்

சண்டே ஸ்பெஷல்...

செல்வந்தர்கள் விளை யாட்டு என அழைக்கப் படும் டென்னிஸ், உலகின் 4-வது மிகப் பெரிய விளையாட்டாக உள்ளது. இந்த டென்னிஸ் விளையாட்டிற்கு உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். பண வசதி இருந்தால் மட்டுமே டென்னிஸ் போட்டியில் விளையாட முடியும் என என்ன வேண்டாம். பண வசதி இருந்தால் மட்டுமே போட்டி யைக் காணவும் முடியும். இதற்குக் காரணம் ஒரு தொடரின் பரிசுத் தொகைக்கு ஏற்ப டிக்கெட் விலை நிர்ணயிக்கப்படுவதால் தான்.    சர்வதேச விளையாட்டுத் தொடர் களுக்கு 30 கோடி பரிசுத்தொகை யுடன், கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு சராசரியாக 300 கோடிக்கும் அதிக மான பரிசுத்தொகையுடன் போட்டி நடத்தப்படுகிறது. இத்தகைய சிறப்பு டைய இந்த டென்னிஸ் விளையாட்டு 2019-ஆம் ஆண்டிலிருந்து மாறுபட்ட பாதையில்  பயணித்து அசுர வளர்ச்சி யில் வெற்றி கண்டுள்ளது. அதனை பற்றி விரிவாக பார்க்கலாம்: 

ஆட்டத்திறன் 

முன்பெல்லாம் டென்னிஸ் விளை யாட்டில் வீரர் - வீராங்கனைகள் கடுமையாகப் போராடுவார்கள். உலகின் மிகப்பெரிய தொடரான கிரா ண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் குறைந்தபட்சம் 4 மணிநேரம் போராடி னால் தான் கோப்பை கிடைக்கும் என்ற ஆரூட வார்த்தைகளும் உண்டு. ஆனால் சமீப காலமாக இந்த போரா ட்டம் எல்லாம் காற்றில் பறந்து வரு கிறது. காரணம் இளசுகளின் தொழில் நுட்பம் சார்ந்த ஆட்டம் தான். புரி யும் படி சொன்னால் டெக்னிக்கல் சார்ந்தவை. இந்த புதுவகை ஆட்டம் பெரும்பாலும் வேறு துறையிலிருந்து முளைத்துள்ளது. பேட்மிண்டன் துறையிலிருந்து டிராப், ஸ்மாஷ் ஷாட்கள் மூலம்  60% ஆட்ட நுணுக்கம் உருவாகியுள்ளது. தற்போது இந்த வகை  ஷாட்கள்  அதிகம் விளாசப்படு கிறது. இதே போல கிரிக்கெட் துறை யின் முக்கிய அம்சமான பவுன்சர் போலவே டென்னிஸிலும் ஒரு வகை யான ஷாட் தலைக்கு மேல் விளா சப்படுகிறது. சர்வீசுகளின் வேகமும் 7 கி.மீ. வேகத்திற்கு முன்னோக்கிச் சென்றுள்ளது.  

பரிசுத்தொகை 

கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு 200 கோடிக்கும் அதிகமான பரிசுத் தொகையை அள்ளி வீசுவது அனை வருக்கும் தெரிந்த விஷயம் தான் என்றாலும், தற்போதைய காலகட்டத் தில் சாதாரண ஏடிபி தொடர் கூட 30 கோடிக்கும் அதிகமான பரிசுத் தொகையில் நடத்தப்பட்டு வரு கிறது. இதுபோக சீனா நடத்தும் சர்வ தேச டென்னிஸ் தொடர்களின் பரிசுத் தொகை 50 கோடிக்கு அதிகமாக உள்ளது. இன்னும் 2 வருடங்களில் சீனா 200 கோடியுடன் டென்னிஸ் விளையாட்டு நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.    இளசுகளின் எழுச்சி, ஆட்டத் திறன், பரிசுத்தொகை மூலம் டென்னிஸ் துறை  200% அதிவேக வளர்ச்சியுடன் சுழல்கிறது. குறிப்பாக 2019-ஆம் ஆண்டில் அதிவேக வளர்ச்சி கண்டுள்ள ஒரே விளையாட்டு டென்னிஸ் தான். சமீபத்தில் நிறைவு பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென் னிஸ் தொடரில் பல மாற்றங்கள் நிகழ்ந்ததை அனைவரும் அறிந்தி ருப்பீர்கள். அந்த மாற்றத்தின் முதல் படி இளசுகள் முன்னணி வீரர்களைத் துவம்சம் செய்தது தான்.  டென்னிஸ் துறையின் மாறுபட்ட வளர்ச்சிக்குக் காரணம் டென்னிஸ் சங்கம் கிடையாது. இளசுகளின் ஆர்வம் தான்....