லட்சுமி விலாஸ் வங்கியின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கி கடந்த சில மாதங்களாக கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிதிநெருக்கடியை சமாளிக்க லட்சுமி விலாஸ் வங்கியின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும் டிசம்பர் 16ஆம் தேதி வரை தனிநபர் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.25000 மட்டுமே எடுக்க முடியும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் தற்காலிக நடவடிக்கை தான், நிலைமை சீரான பிறகு மீண்டும் வழக்கமான செயல்பாடுகள் நடைமுறைக்கு வரும் என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் 2020ஆம் ஆண் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் மட்டும் ரூ.397 கோடி வருவாய் இழப்பை லட்சுமி விலாஸ் வங்கிசந்தித்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்து.