tamilnadu

ஏற்காட்டில் சாலை விபத்தில் வாலிபர் பலி

சேலம், ஜன. 16- ஏற்காட்டில் நடைபெற்ற சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுகா செம்மநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் மாதேஷ் (19). ஹோட்டல் தொழிலாளியான இவர் செவ்வாயன்று காலை  7 மணியளவில் செம்மநத்தம் கிராமத்தில் இருந்து தனது நண்பரின் இருசக்கர வாகனத்தில் ஏற்காடு நோக்கி சென் றார். கடுக்காமரம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த நான்கு சக்கர வாகனத்தில் மோதி கீழே விழுந்தார். அப் போது மாதேசின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமணைக்கு மாதேஷ் கொண்டு  வரப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்து வர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாகக் கூறினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

;