tamilnadu

img

ஏற்காடு யூனியன் கடைகள் டென்டரில் தள்ளுமுள்ளு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

சேலம், பிப். 19- ஏற்காடு யூனியன் கடைகள் டென்டரில்  தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், தேதி குறிப் பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான 14 கடைக ளுக்கு புதனன்று டென்டர் நடைபெறுவ தாக அறிவிக்கப்பட்டு, புதனன்று காலை டென்டர் துவங்கியது.  1 ஆம் நெம்பர் கடைக்கு டென்டர் நடக்கும் போது, டெபா சிட் செலுத்தியவர்களிடையே போட்டி ஏற் பட்டு, வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஏலம் நடத்தும் அலுவலர் அருள் ஆனந்த ராஜ், காலை 11:00 மணிக்கு ஏலத்தினை ஒரு மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தி வைத் தார்.பின்னர் 12 மணிக்கு ஏலத்தினை  துவக்கியபோதும் மீண்டும் டெபாசிட்  செலுத்தியவர்கள் தங்களுக்குள் வாக்குவா தம் செய்து கொண்டிருந்தனர். இதனால்,  ஏலத்தினை நிர்வாக காரணங்களால் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தனர். இதனால், கடைகளுக்கு டெபாசிட் செய்தவர்கள் சிலர், டென்டர் இன்றே நடத்த  வேண்டும் என கூறி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் பின்னர் நடைபெறும் ஏலம் நியாயமானதாகவும், அமைதியாகவும் நடைபெற வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து காவல் துறையினர் அவர் களை சமாதானம் செய்து கலைந்து போகச் செய்தனர்.