tamilnadu

ஏற்காட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

ஏற்காடு, ஏப்.25 ஏற்காட்டில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சேலம் மாவட்டம், ஏற்காடு அருகே வாழவந்தியை அடுத்த பாறைக்காட்டு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி(34). இவர் அங்குள்ள ஒரு எஸ்டேட்டில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 26.7.2014 ஆம் தேதியன்று இவர் அப்பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.அதன்பேரில் ‘போக்சோ‘ சட்டத்தின் கீழ் துரைசாமி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் அனைத்து மகளிர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து புதனன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் சாட்டப்பட்ட துரைசாமிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பளித்தார்.

;