tamilnadu

img

சாலையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

இளம்பிள்ளை, செப். 11-  இளம்பிள்ளையில் சாலையில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே உள்ள பழகாரன் தோட்டம் பகுதியில் தனியார் நிதி நிறுவனம், அரசு மற்றும் வங்கிகள், தனியார் மருத்துவ மனைகள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்டவை  இயங்கி வரு கின்றன. இந்த வீதியில் தனியார் நிறுவனங்களின் பணிபுரி யும் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் தங்களின் இரு சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி வருவதால், அவ்வ ழியாக  செல்லும் நெசவு தொழிலாளர்கள் வாகனங்கள் உட் பட மற்ற ஓட்டுநர்களும், பாதசாரிகளும் செல்ல முடியாமல் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனை சீர் செய்ய காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

;