சேலம், பிப்.8- பாலியல் வன்முறைக்கு எதிராக மாதர் சங்கத்தினர் மேற்கொண்ட நடைப்பயணத்தில் பங்கேற்றவர் களுக்கு பாராட்டு விழா சேலம் வி.பி.சிந்தன் நினைவகத்தில் சனியன்று நடைபெற்றது. பாலியல் வன்முறையிலிருந்து பெண்கள் மற்றும் பெண் குழந்தை களை பாதுகாக்க வலியுறுத்தி திரு வண்ணாமலை முதல் சென்னை வரை கடந்த நவம்பர் 25 முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை அனைந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நடைப்பயணம் மேற்கொண்டனர். இந்த நடைப் பயணத்தில் சேலத்திலிருந்து பங்கேற்றவர்களுக்கும், உள்ளாட்சி தேர்தல் வார்டு உறுப்பினர்களாக வெற்றிபெற்ற மாதர் சங்க நிர்வாகிகள் பூங்கோதை, செல்வி ஆகியோருக்கு பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி, மாதர் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.ராதிகா, மாவட்ட செயலாளர் ஞான சௌந்தரி, மாவட்ட பொருளாளர் என்.ஜெயலட்சுமி, மாவட்ட துணை தலைவர் கே.ராஜாத்தி, பெருமா உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.