ஏற்காடு, நவ.3- ஏற்காட்டில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன் பாடு குறித்து சனியன்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண் டனர். சேலம் மாவட்டம், ஏற்காடு ஒண்டிக்கடை பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன் பாடு மற்றும் விற்பனை குறித்து ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசந்தர் மற்றும் வட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த மளிகை கடை உரிமையாளர்கள் மற்றும் பழக்கடை உரிமையாளர்களிடம் ரூ.6,200 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் ஆய்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து கண்ட றியப்பட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். அடுத்த கட்டமாக கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் ராமசந்தர் தெரிவித்தார்.