tamilnadu

img

ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ், பிட்னஸ் சாம்பியன் போட்டி தங்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா

சேலம், செப்.9- தேசிய அளவிலான ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ் மற்றும் பிட்னஸ் சாம்பியன் போட்டிகளில் தங்கம் வென்று உலக அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவிகளுக்கு பாராட்டு விழா சேலத்தில் நடைபெற்றது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தேசிய அளவிலான ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ் மற்றும் பிட்னஸ் சாம்பியன் போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் 12, 16 மற்றும் 18 வயதிற்குட் பட்டோருக்கான போட்டிகளில் சேலம் ராமகிருஷ்ணா சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் இப்பள்ளி மாணவிகள் 12 வயதிற்குட்பட்டோருக்கான மூவர் பிரிவில் ஒரு தங்க  பதக்கமும், 18 வயதிற்குட்பட்டோருக்கான மிக்ஸ்டு கிராண்ட் பிரிவில் ஒரு தங்கமும் மற்றும் 16 வயதிற்குட் பட்டோருக்கான குழு போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவிகள் உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய் யப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெற்றி பெற்ற மாணவிகளுக்கான பாராட்டு விழா திங்களன்று தனியார் பள்ளி வளாகத் தில் நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர், முதல்வர்  மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர்.