tamilnadu

ஆறு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை காவல் துறையினர் தீவிர விசாரணை

சேலம், நவ.14- ஓமலூர் அருகே 6 வயது  சிறுமியை மர்ம நபர்கள் தூக்கிச் சென்று பாலியல்  வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.   சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த ஊ.மாரமங்கலம் ஊராட்சி யைச் சேர்ந்த 6 வயது சிறுமி அருகி லுள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில்  பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிந்த சிறுமியை, சேலத்தில் இருந்து மேட்டூர் செல்லும் ரயில்வே  தண்டவாளம் அருகே சில இளை ஞர்கள் வழிமறித்துள்ளனர். இதன் பின் அச்சிறுமியை மறைவான பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிறுமி  கூச்சலிடவே அருகி லுள்ளவர்கள் அங்கு வருவதை கண்ட  சம்மந்தப்பட்ட இளைஞர்கள் அங்கி ருந்து தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து சிறுமி பெற்றோர் களிடம் தெரிவிக்கவே உடனடியாக தொளசம்பட்டியில் உள்ள ஒரு மருத் துவமனையில் சிகிச்சைக்காக சேர்த் துள்ளனர். இச்சம்பவம் பற்றி தகவல்  அறிந்த தொளசம்பட்டி காவல்துறை யினர் மற்றும் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச் சம்பவம் பற்றி அப்பகுதியைச் சேர்ந்த  பொதுமக்கள் கூறுகையில், இந்த  பகுதியில் இளைஞர்கள் சிலர் மது அருந்திக்கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர். இது போன்ற நபர்கள் தான் இதுமாதிரி யான சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க லாம் எனவும், சிறுமியை பாலியல் வன் கொடுமையில் ஈடுபட்ட இளைஞர் களை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும்  தெரிவித்தனர்.

;