சேலம், மே 18 - சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வடமா நிலத் தொழிலாளர்களை காவல்து றையினர் அராஜகமான முறை யில் விரட்டியடித்ததுடன், சிலரை கைது செய்தனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த 55 நாட்களுக் கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன்காரண மாக தமிழகத்தில் தங்கி பணி யாற்றி வந்த லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் வேலை இழந்து உண்ண உண வின்றி தவித்து வருகின்றனர். ஆகவே, தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திடக் கோரி ஆங்காங்கே போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மாந கரத்தில் பெரிய புதூர், சின்ன புதூர் ஆகிய பகுதிகளில் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள் தங்கி இருந்து கட்டிடத் தொழில், டைல்ஸ் ஒட்டும் தொழில் மற்றும் வெள்ளித் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தி டக்கோரி ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தி ருந்தனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்காத தால் திங்களன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நூற் றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த காவல்துறையினர் வடமாநிலத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். அப்போது, தாங்கள் 50 நாட்க ளுக்கும் மேலாக பசி, பட்டினி யால் தவித்து வருவதால் உடனடி யாக தங்களை சொந்த ஊருக்கு அனுப்பிட வேண்டும் என ஆவே சமாக முறையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்களை விரட்டியடித்ததால் போராட் டத்தில் ஈடுபட்டோர் பல்வேறு திசைகளில் ஒட ஆரம்பித்தனர். இதனையடுத்து காவல்துறை யினர் அவர்களை விரட்டிப் பிடித்து கைது செய்தனர். அப் போது தொழிலாளர்கள் வாகனத் தில் ஏற மறுத்ததால், அவர்களை இழுத்தும், அடித்தும் மிகவும் அராஜகமான முறையில் நூற்றுக் கும் மேற்பட்டோரை கைது செய்த னர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.