tamilnadu

img

சேலம் உருக்காலை தொழிலாளர்கள் கொட்டும் மழையில் 27 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

 சேலம், ஆக. 31- சேலம் உருக்காலை தொழிலா ளர்கள் மத்திய அரசின் தனியார் மய நடவடிக்கையை கண்டித்து 27 ஆவது நாளாக கொட்டும் மழை யிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக உள்ள சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு செயல்பட்டு வரு கிறது. இதன்ஒருபகுதியாக உலக அளவில் மத்திய அரசு டெண்டர் கோரியுள்ளது. கடந்த  ஆக.20 ஆம் தேதியோடு டென்டர் காலம்முடிவடைந்த நிலையில் மேலும்இரண்டு வாரகாலம் (செப்.10)வரை நீட்டிக்கப்பட் டுள்ளது.  இதனைத்தொடர்ந்து சேலம் உருக்காலை தொழிலா ளர்கள் ஆலையை தனியாருக்கு விற்க அனுமதிக்ககூடாது என வலியுறுத்தி தொடர்காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இதன்தொடர்ச்சியாக சனி யன்று 27 ஆவது நாளாக கொட்டும் மழையிலும் காத்திருப்பு போராட் டத்தை தொடர்ந்தனர். அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தை சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.மயில்வேலன் வாழ்த்திப் பேசி னர். சிஐடியு மாவட்ட தலைவர் பி. பன்னீர்செல்வம், சிஐடியு உருக் காலை தொழிலாளர் சங்க செய லாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகி கள் பங்கேற்றனர்.