tamilnadu

சேலம் மாவட்டத்தில் 243 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சேலம், ஏப்.17-சேலம் மாவட்டத்தில் பதட்டமான 243 வாக்குச்சாவடிகளிலும் கூடுதல் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள் எனசேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் மொத்தம் 28லட்சத்து 94 ஆயிரத்து 597 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 1169 வாக்குச்சாவடி மையங்களில் 3288 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களில் 15 ஆயிரத்து 784 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 243பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு வாக்காளர்கள் அனைவரும் பயமின்றி வாக்களிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலாக துணை ராணுவ படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் பணிபுரியும் காவல்துறையினர் சேலத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். புதனன்று மாலைக்குள் அனைத்து வாக்குச் சாவடிகளையும் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பதட்டமில்லாமல் தேர்தல் நடத்தப்படும் என சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான ரோஹிணி தெரிவித்தார்.

;