வாய்ஸ் கால் மூலம் லாட்டரி விற்பனை சமூக ஊடகங்களில் வைரல்
சேலம், டிச.21- வாட்ஸ் ஆப் - குரூப், வாய்ஸ் கால் மூலம் லாட்டரி விற்பனையாளர் பேசும் ஆடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை சட்டவிரோதமாக நடைபெற்று வந்த நிலையில், விழுப் புரத்தில் நகை தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது. இதைத்தொடர்ந்து போலீசார் லாட்டரி விற் பனையாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சேலம் மாவட்டம், ஆத்தூரில் வாட்ஸ்-ஆப்- குரூப் மூலம் லாட்டரி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், கேரளாவில் இருந்து ஒரு பெண் செல்போன் வாய்ஸ் மூலம் இன்றைய 3 நம்பர் லாட்டரி நம்பர்களை 2.30 மணிக்குள் தர வேண்டும் என தகவல் சொல்லி பேசு கிறார். இதையடுத்து ஆத்தூரில் உள்ள லாட்டரி விற்பனை செய்யும் நபர், தனது பணியாளர் மற்றும் வாடிக்கையாளர் களிடம் செல்போன் வாய்ஸ் கால் மூலம் லாட்டரி நம்பர் மற்றும் பரிசு விபரத்தையும் பேசுகிறார். இதில் லாட்டரி விற்பனை செய்து வரும் வாட்ஸ் ஸாப் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளருக்கும் இந்த ஆடியோவை அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். ஆனால், லாட்டரியை விற்பனை செய்பவர்கள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால், போலீசார் அவர் களை கைது செய்ய தயங்கி வருவதாக கூறப்படுகிறது.
சாலைப்போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேலம், டிச.21- சேலம் மாவட்டம், வீரகனூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. சேலம் மாவட்டம், வீரகனூரில் ஆத்தூர் வட்டார போக்கு வரத்து அலுவலர் ஜெயகௌரி தலைமையில் வெள்ளி யன்று சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். சாலை விதிகளை பின் பற்ற வேண்டும். வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஆத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.