இளம்பிள்ளை அருகே 4 பேர் மாயம் - காவல்நிலையித்தில் புகார்
இளம்பிள்ளை, டிச. 23- இளம்பிள்ளை அருகே சேலைக்கு கல் வைக்கும் தொழிலாளி குடும்பத்துடன் மாயமானதாக காவல் நிலை யத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள நடுவ னேரி அதன் ஒரு பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் வீர குமார் (43). இவர் இளம்பிள்ளை பகுதியில் உற்பத்தியாகும் சேலைகளுக்கு கல் வைக்கும் வேலையில் ஈடுபட்டு வந் துள்ளார். இவரது மனைவி மகேஸ்வரி (40), மகன் தினேஷ் சூர்யா (14), மகள் ராதிகா ஸ்ரீ (12) ஆகியோர் கடந்த டிச.17ஆம் தேதி இரவு காக்காபாளையத்தில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் இருசக்கர வாகத்தை நிறுத்தி விட்டு வெளியூருக்கு சென்றவர்கள் இதுவரை வீடு திரும்ப வில்லை என வீரகுமாரின் தாயார் கனகரத்தினம் (66) மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள் ளார். இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசா ரித்து வருகின்றனர்.
ஆளும்கட்சி தேர்தல் விதிமீறல்: கண்டுகொள்ளாத காவல் துறை
திருப்பூர், டிச. 23 – திருப்பூரில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்தும் தேர்தல் விதிமீறல்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக் காத காவல் துறையினர், சுயேட்சைகள் உள்ளிட்ட மற்ற வர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. இடுவாய் ஊராட்சியில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் கள் வெளிப்படையாக தேர்தல் விதிமுறைகளை மீறி வரு கின்றனர். மின் கம்பங்கள், பொது இடங்களில் சுவரொட்டி களை ஒட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதே ஊராட்சியில் வார்டு உறுப்பினருக்குப் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஏ.சின்ராஜ் என்பவருக்காக தேர்தல் பணியில் ஈடுபட்ட ஒருவர் மின் கம்பத்தில் சுவரொட்டி ஒட் டியிருக்கிறார். இதையடுத்து மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுவரொட்டி ஒட்டியதாக ஜான்சன் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆளும் கட்சியினர் அப்பட்டமாக விதிமீறல் செய்வ தைப் பற்றி கண்டு கொள்ளாமல், தேர்தல் விதிமீறல் மீது நடவடிக்கை எடுத்ததாக காட்டிக் கொள்வதற்காக சுயேட் சைகள் மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது காவல் துறை யின் கண்துடைப்பு நடவடிக்கையைக் காட்டுவதாக உள் ளது என்று எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர் கள் விமர்சித்துள்ளனர்.