அவசர மற்றும் தீவிர சிகிச்சை பற்றிய கருத்தரங்கம்
சேலம், செப்.14- அவசர மற்றும் தீவிர சிகிச்சை பற்றிய கருத்தரங்கம் ஞாயிறன்று சேலத்தில் நடைபெறவுள்ளது. உடல் ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். இவற்றில் மிக முக்கியமானது அவசர சிகிச்சையாகும். உயிருக்கு அபாயம் ஏற்பட்டு முதல் பத்து நிமிடத்திற்குள் சிகிச்சை அளிப்பது பிளாட்டினம் (Platinum) மணித்துளிகள் எனப்படும். முதல் ஒரு மணி நேரத்திற்குள் அவசர சிகிச்சை அளித்தால் பல உயிரி ழப்புகளை தவிர்க்கலாம். இது தங்கமான நேரம் (Golden Hour) எனப்படும். இந்நிலையில் சேலம் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் பல்வேறு அவசர சிகிச்சை பற்றிய கருத்தரங்கு ஞாயி றன்று நடைபெற உள்ளது, இக்கருத்தரங்கில் சேலம் மற்றும் சுற்றுவட்டார மருத்துவர்களுக்கு பயிற்சி யளிக்கப்படுகிறது. இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள 100க்கு மேற்பட்ட மருத்துவர்கள் முன்பதிவு செய்துள்ளதாக ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையின் மேலாண்மை இயக் குனர் டாக்டர் அர்த்தநாரி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை, இடுபொருள்கள்
நாமக்கல், செப்.14- கொல்லிமலை வட்டார விவசாயிகளுக்கு விதை, இடு பொருள்கள் மானிய விலையில் வழங்கப்படும் என வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குநர் தி.அன்புச் செல்வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கொல்லிமலை வட்டார விவசாயிகள், செம்மேட்டில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடப்பு காரீப் பருவத்திற்கேற்ற விதை நெல் ரகம் ஐ.ஆர்-20, விதை ராகி ரகம் கோ - 14 உயர் ரக விளைச்சல் தரும் ரகங்கள், உயிர் உரங்கள் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், விதைக் கிராம திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்குவதை மானிய விலையில் பெற்று பயன் பெறலாம். இடுபொருள்கள் விவரம் மற்றும் மானியத் திட்டங்கள் பற்றி விவசாயிகள் தெரிந்து கொள்ள “உழவன் செயலி’ பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். பயிர் விளைச்சல் அதிகப் படுத்த உயிர்உரங்கள் (அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா) மற்றும் சூடோமோனாஸ் (எதிர்நுண்ணுயிர் காரணிகள்) பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று வரு மானத்தை இரட்டிப்பாக்கலாம். மேலும், விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.