tamilnadu

img

சத்துணவில் அழுகிய முட்டைகள் – அதிர்ச்சி  

அரசுப்பள்ளியில் சத்துணவு முட்டைகள் கெட்டுப் புழுக்கள் நிறைந்து அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு சத்துணவு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகேயுள்ள இடங்கணசாலை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட கே.கே.நகர் அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் வழங்கப்படும் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர்.  இந்த நிலையில் இன்று மதியம், வழங்க இருந்த சத்துணவு முட்டைகள் கெட்டுப் புழுக்கள் நிறைந்து அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு சத்துணவு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர். அவர் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அழுகிய முட்டைகளை குழிதோண்டி மண்ணில் புதைத்து புழுக்கள் இறந்து  முட்டையின் அட்டைகளை தீயிட்டு எரித்து அப்புறப்படுத்தி உள்ளனர்.  ஏற்கனவே இதுபோன்ற சம்பவம் மகுடஞ்சாவடி வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.  

அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய விசாரணை செய்து அழுகிய முட்டைகளை விநியோகம் செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.   

;