tamilnadu

img

கூலி உயர்வு வழங்கிடக்கோரி ரயில்வே கூட்செட் தொழிலாளர்கள் ஆவேசம்

சேலம், அக்.10- கூலி உயர்வு கேட்டு சேலம் மார்க்கெட் கூட்செட் நுழைவாயில் முன்பு ரயில்வே ஏற்றுமதி - இறக்கு மதி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மார்க்கெட் மற்றும் சேலம்  ஜங்ஷன் கூட்செட்களில் 292 சுமைப்பணி தொழிலாளர்கள் பல  ஆண்டுகளாக பணியாற்றி வரு கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கி வந்த  நிலையில், கடந்த முறை போடப் பட்ட ஒப்பந்த காலம் 2020 ஏப்ரல்  30 ஆம் தேதியுடன் நிறைவடைந் தது. இந்நிலையில், மார்ச் மாதம் முதலே கூலி உயர்வு கோரிக்கை எழுப்பப்பட்டு பல கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றும், பார்வா டிங் ஏஜென்சி அசோசியேசனுக்கு கடிதம் கொடுக்கப்பட்டும் தற் போது வரை கூலி உயர்வு வழங்கப் படவில்லை. இந்நிலையில் உடனடியாக கூலி உயர்வு வழங்கக்கோரி சிஐ டியு ரயில்வே ஏற்றுமதி - இறக்குமதி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.வெங்கடபதி தலை மையில் சனியன்று கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், செயலாளர் ஏ. கோவிந்தன், பொரு ளாளர் பிரபு, உதவித் தலைவர் மதி யழகன், முருகன் சுந்தர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.