இளம்பிள்ளை, நவ. 8- மகுடஞ்சாவடியில் பொதுப் பாதையை மறித்துக் கட்டிடம் கட்டப்பட்டதை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர் சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகுடஞ்சாவடி ஊராட்சி 11 ஆவது வார்டு எர்ணாபுரம் கிராமப் பகுதி யில் உள்ள 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளியன்று மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேஷிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, மகுடஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த கிருஷ் ணமூர்த்தி என்பவர் பஞ்சாயத்துக்கு சொந்த மான சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டி யுள்ளார்.
முன்னதாக, அந்த சாலையை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் படுத்தி வந்த நிலையில், தற்பொழுது ஆக்கி ரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அவ்வழி யாக செல்லும் பொதுமக்கள் கடும் சிர மத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் பயன்படுத்தி வரும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கடந்த மாதம் கோரிக்கை மனு அளித்தோம். ஆனால், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி பொது வழி பாதையினை மீட்க வேண்டுமென மனு வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.