தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் 34வது அமைப்பு தினத்தையொட்டி சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொடியேற்றி அனுசரிக்கப்பட்டது. இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வாசுதேவன், செயலாளர் ஜான் ஆன்ஸ்டீன், துணைச் செயலாளர் விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.