சேலத்தில் எம்ஜிஆர் சிலை அவமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தில் அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எம்ஜிஆர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்களை சேற்றை வீசியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சேற்றை கழுவி சுத்தம் செய்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்