சேலம், ஜூன் 3- தலித் சமூகத்தைச் சார்ந்த சர வணன் காவல்துறையின் விசார ணக்கு பிறகு மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரின் இறப்பிற்கு உரிய நியாயம் கேட்டு சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், திருவாக்க வுண்டனூர் பைபாஸ் சுகுமார் கால னியில் வசிக்கும் வெள்ளி வியாப ரம் செய்யும் தொழிலாளி சரவ ணன். இவரை சூரமங்கலம் காவல் துறையினர் கடந்த மே 21ஆம் தேதியன்று ஒரு புகாரின் பேரில் விசாரணைக்காக காவல்நிலை யத்திற்கு அழைத்துச் சென்றுள் ளனர். காவல்துறையினரின் விசாரணைக்கு பின்னர் வீட்டிற்கு வந்த சரவணன் தனது மனை வியிடம் காவல்துறையினர் தன்னை கடுமையாக அடித்து துன்புறுத்தியதாக கூறியுள்ளார். இதனால் தனது உடல் முழுவதும் வலியிருந்ததாக தெரிவித்த சர வணன், மறுநாள் வீட்டில் படுக் கையிலேயே இறந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரின் உயிரிழப்பிற்கு நியாயம் கேட்டு அவரின் உறவினர்கள் போராட் டத்தில் ஈடு்பட்டனர். இதற்கு ஆதரவாக போராட்டத்தில் பங் கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பின ரும், மாதர் சங்க மாவட்ட செயலா ளருமான ஐ.ஞானசௌந்தரி மற் றும் அவரது கணவர் இருதயசாமி உள்ளிட்டவர்கள் மீது காவல்து றையினர் கண்மூடித்தனமாக தாக் குதல் நடத்தி கைது செய்தனர். காவல்துறையின் இந்த அரா ஜக நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கட்சி சேலம் மேற்கு மாநகர குழு சார்பில் சூரமங்கலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு மேற்கு மாநகர செயலா ளர் எம்.கனகராஜ் தலைமை வகித் தார். இதில், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி, சிஐடியு மாநில துணைத்த லைவர் ஆர்.சிங்காரவேலு, சிபி எம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.குணசேகரன், ஐ.ஞான சௌந்தரி, மாவட்டக்குழு உறுப் பினர் பி.பாலகிருஷ்ணன், பி.சந்தி ரன், டி.பரமேஷ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனை வரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.