tamilnadu

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

ஏற்காடு, ஜூன் 14- ஏற்காட்டில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த வரை காவல் துறையினர் கைது செய்தனர். ஏற்காடு, முளுவி ஊராட்சிக்குட்பட்ட சுரக் காய்ப்பட்டி கிராத்தை சேர்ந்தவர் தீர்த்தகிரி  மகன் அழகு என்கிற சண்முகம் (32).  விவசாயியான  இவர் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக  ஏற்காடு காவல்துறையினருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது.  இதனையடுத்து, ஏற்காடு காவல் துணை ஆய்  வாளர் ரகு தலைமையிலான காவல் துறையினர்  சண்முகம் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.  அங்கு, வீட்டின் அருகில் உள்ள ஆட்டுப்பட்டியில்  மறைத்த வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை  கைப்பற்றியதுடன், அவரை கைது செய்தனர்.

;