tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பெத்தநாயக்கன்பாளையத்தில் இடதுசாரி கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ஜோதிபாசு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சிபிஎம் தாலுகா செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, தாலுகா குழு உறுப்பினர்கள் டி.பெருமாள், ராமசாமி, சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.