இளம்பிள்ளை, மார்ச் 15- சேலம் மாவட்டம், இடங்கண சாலை பகுதியில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் கோவையைச் சேர்ந்தவர் முத லிடம் பெற்றார். சேலம் மாவட்டம் இளம் பிள்ளை அருகே உள்ள இடங்கண சாலை பேரூர் காடையாம்பட்டி பகுதியில் சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவர் ஸ்டாலின் 67-வது பிறந்தநாளை யொட்டி தளபதி மினி மாரத்தான் 2020 மாநில அளவிலான போட்டி ஞாயிறன்று நடைபெற்றது. இந்த போட்டிக்கு மகுடஞ்சாவடி ஒன்றிய கழக பொறுப்பாளர் பச்சமுத்து தலைமை வகித்தார். இந்த போட்டியினை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக, மாவட்டத் தொண்டரணி அமைப் பாளர் பி.செல்வம் வரவேற்றார். மேலும், இப்போட்டியில் மாவட் டத் துணைச் செயலாளர்கள் சுந்தரம், சம்பத், பொருளாளர் பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் அன்பழகன், நிர்மலா, முன்னாள் எம்எல்ஏ காவேரி மற்றும் கட்சி நிர்வாகி கள் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். இப்போட்டியில் கோவை, ஊட்டி, சேலம், இளம்பிள்ளை, தெலுங்கானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளில் இருந்து 1500க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். இதில், 12, 8, 5,2 ஆகிய கிலோ மீட்டர் தூரம் வரை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கோவையைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் (12 கி.மீ) முதலிடம் பிடித்தார். இவருக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கமும், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 8 கிலோமீட்டர் தூர போட்டியில் இடங்கணசாலை பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா முதலிடத்தைப் பிடித்தார்.இவருக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. 5 கிலோமீட்டர் தூரம் போட்டியில் உத்தரபிரதேசம் பகுதியை சேர்ந்த மாணவி முதலிடம் பெற்றார். இவருக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட் டது. மேலும், 2 கிலோமீட்டர் தூர போட்டியில் முதலிடம் பிடித்த குழந்தைகளுக்கு ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை, சான் றிதழ் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து 2 மற் றும் 3-ம் இடத்தை பிடித்தவர்க ளுக்கு ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயி ரம்,ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.1500, ரூ.1000 மும், சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்பட் டது. மேலும், ஆறுதல் பரிசுக ளும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டன. இப் போட்டியில் வெற்றி பெற்றவர்க ளுக்கு, சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இதனை தொடர்ந்து கடையாம்பட்டி சந்தை பகுதியில் மரக்கன்று நடப்பட்டது. முன்னதாக இந் நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.