சேலம், ஆக.5- மலைவாழ் மக்களை நிலம் வெளி யேற்றம் செய்யக் கூடாது என வலி யுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்கம் சார்பில் ஆத்தூர் கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், கல்வராயன் மலையில் தலைமுறை தலைமுறை யாக வசித்து வரும் நிலங்களிலி ருந்து மலைவாழ் மக்களை எக்கா ரணத்தை கொண்டும் வெளியேற்றம் செய்ய வற்புறுத்தக்கூடாது. அத்துமீறி சில்வார் ஓக் மரங்களை வெட்ட அனுமதி கொடுத்த பயிற்சி அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுத்திட வேண்டும். கல்லூர் கிராமத்தில் குடியிருந்து விவசா யிகளை சட்டவிரோதமாக பிடித்து வெள்ளைத் தாளில் கைரேகை வாங் கிய ரெகுலர் ஏசிஎஃப் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண் டும். சந்தன மர கடத்தல் வழக்கு பதிவதாக அச்சுறுத்தி மலைவாழ் மக்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம் பறிந்த வனத்துறையினரின் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
2006 வன உரிமை சட்டத்தில் சேலம் மாவட்ட வனப்பகுதிகளில் வன உரிமை கோரி விண்ணப்பித்த அனைவரது மனுக்களையும் பெற்று பரிசீலித்து வன உரிமை சான்று வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, ஆத்தூர் கோட்டாச்சியர் துரை தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், வரும் ஆகஸ்ட் 17, 18 ஆம் தேதிகளில் மாவட்ட வன அலுவலர், வருவாய்த்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து கூட்டம் நடத்திய பின்பு உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு, மாநிலப் பொருளாளர் பொன்னுசாமி, மாநிலக்குழு உறுப்பினர்கள் என். கிருஷ்ணமூர்த்தி, சின்னமணி, நிர்வா கிகள் பி.ஆர்.மாதேஸ்வரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.