tamilnadu

img

குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட வலியுறுத்தி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 22- தமிழக அரசு எட்டு வழிச் சாலையை கைவிடுவதாக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்ற வேண்டும் என எட்டு வழிச்சாலை எதிர்ப்பு  கூட்ட மைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். சேலம்- சென்னை எட்டு வழிச் சாலை எதிர்ப்பு கூட்டு இயக்கம் அமைப்பின் ஆலோச னைக் கூட்டம் சேலம் குமரகிரி யில் கூட்டு இயக்கத் தலைவர் கந்தசாமி தலைமையில் சனியன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக சட்ட மன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடுவதாக தமி ழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். எட்டு வழிச் சாலை வந்தால், அதனால் பாதிக்கப் படும் அனைத்து விவசாயிக ளையும் சந்தித்து ஆதரவு திரட்டுவது. நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டு  அனைத்துக் கட்சி தலைவர் களையும் சந்தித்து ஆதரவு கோரு வது. இக்கோரிக்கைகளை முன் வைத்து, வரும் ஜூன் 27 ஆம் தேதியன்று சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுக் கும் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில், ஏஐகேஎம்-சிபிஐ எம்(எல்) மாநிலச் செயலாளர் அய்யந்துரை, வி.சந்திரமோகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஎம்) பி.தங்கவேலு, ஆர். குழந்தைவேல், ஏஐகேஎஸ் (சிபிஐ) எஸ்.செல்வராஜ், விமலன், பிஎம்கே சதாசிவம், கூட்டு இயக்க  நிர்வாகிகள் நாராயணன், மூர்த்தி,  சுதா, கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.