tamilnadu

img

கொரோனா நோயாளிகளிடம் கூடுதல் பணம் வசூல்: நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

சேலம், அக். 3- கொரோனா அச்சுறுத்தலை கார ணம் காட்டி நோயாளிகளை அலைக் கழிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தனிக்குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் பல்வேறு அமைப் பினர் புகார் அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ கத்தில் கொரோனா வைரஸ் தொற் றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலை யில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க பல்வேறு விதிமுறை களுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஆனால், சேலத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தனியார் மருத்துவமனை களில் பல்வேறு முறைகேடுகள் நடப்ப தாக அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை மேற்கொள்ள சென்ற சேலம் ஒன்றிய கூட்டுறவு வங்கி துணை தலைவர் பாலகிருஷ் ணன் என்பவர் கொரோனா பரிசோ தனை என்ற பெயரில் மருத்துவர்கள் அலைக்கழித்ததால் மருத்துவமனை வளாகத்திலேயே உயிரிழந்தார். இதேபோல் இந்த மருத்துவமனைக்கு பல்வேறு பாதிப்புகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள வரும் நோயாளிகளை மருத்துவர்கள் கொரோனா பரிசோ தனை செய்து வந்தால் மட்டுமே சிகிச்சை அளிப்போம் என கூறி அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும். கொரோனா அச்சுறுத்தலை கார ணம் காட்டி நோயாளிகளை அலைக்க ழிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும.

அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும்  மருத்து வமனைகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தனிக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.