tamilnadu

img

குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

சேலம், நவ.14- சேலத்தில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் குழந் தைகள் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பள்ளி கல்வித்துறையின் சார்பில் சேலம் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழ னன்று  குழந்தைகள் தின விழா உற்சாகமாக கொண்டா டப்பட்டது.மேலும் இவ்விழாவையொட்டி கலை இலக்கிய  விழா  மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.  இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப் பட்டது. இந்த பரிசளிப்புவிழாவிற்கு மாவட்ட ஆட்சியர்  சி.அ.ராமன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கேடயங்கள், பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் து. கணேஷ்மூர்த்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி  நிறுவன முதல்வர் மு.செல்வம், சேலம் மாவட்டக் கல்வி  அலுவலர் லெ.சுமதி, எடப்பாடி மாவட்டக் கல்வி அலுவலர்  ம.விஜயா, சங்ககிரி மாவட்டக் கல்வி அலுவலர் ந. இராமசாமி, ஆத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் த.தங்க வேல், சேலம் ஊரகம் மாவட்டக் கல்வி அலுவலர் இரா.மதன்குமார், ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  தாளாளர் அருட்சகோ சுஜிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.