ஓமலூர்,மார்ச்15- நூறு வயதை தாண்டிய பெண்மணிக்கு நூற் றாண்டு விழா கொண்டாடிய 61குடும்ப உறுப்பினர் கள் கிராமமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பாட்டி யிடம் ஆசீர்வாதம் பெற்று சென்றனர். சேலம் மாவட்டம், காமாண்டப்பட்டி ஊராட்சி யில் உள்ள சின்னுசாமி அவரது மனைவி பருவதம். இந்த தம்பதியினருக்கு 3மகன்கள், 2மகள்கள் இருத்த நிலையில் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்த பின் அவரது 80வது வயதில் கடந்த 1996ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இந்நிலையில், அவரது மனைவி 1920ஆம் வருடம் பிறந்து இன்று வரை ஆரோக்கி யமாக 100வயதை கடந்து இன்று 101வயதில் அடி யெடுத்து வைத்துள்ளார். இவர் இன்னும் தன்னு டைய வேலைகளை தானே செய்து கொள்வது, உறவி னர்களை சரியாக அடையாளம் காண்பது என சரி யான நினைவாற்றலுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்து வருகிறார். இதைதொடர்ந்து, அவரது குடும்ப உறுப்பினர் கள் பாட்டிக்கு நூற்றாண்டு விழா கொண்டாட வேண் டும் என்ற நோக்கில் ஞாயிறன்று கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் 3மகன்கள், 2மகள்கள், 5பேத்திகள், 19கொள்ளு பேரன்கள், 14கொள்ளு பேத்திகள், 1 எள்ளு பேரன் உட்பட 61குடும்ப உறுப்பினர்கள் பாட்டியின் ஆசீர்வாதம் பெற்று கொண்டனர். மேலும், பாட்டியின் நினைவாக வைத்து கொள்ள பணம் மற்றும் தங்க காசுகளை பாதத்தில் வைத்து எடுத்து சென்றனர். இந்நிகழ்ச்சியில் குடும்ப உறுப் பினர்கள் மட்டுமல்லாது தமிழக காங்கிரஸ் கட்சி யின் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், முன் னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு மாநகர் மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட காமாண்டப்பட்டி ஊராட்சியில் உள்ள பொதுமக்க ளும் 100வயது பெண்மணியிடம் ஆசீர்வாதம் பெற்று சென்றனர்.