tamilnadu

தமிழக அரசு சார்பில் உணவு பூங்கா உணவு பொருள் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம், நவ.18- மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான்  சம்படா யோஜனா திட்டத்தின் கீழ்  தமிழ்நாடு அரசின் சார்பில் சேலத்தில் அமைக்கப்படவுள்ள உணவுப் பூங்கா விற்கு, விருப்பமுள்ள உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது, மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்படா யோஜனா திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் காடையாம்பட்டி வட்டம், கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் 11.44 ஏக்கர் பரப்பளவில் ரூ.2575.72 லட்சம் மதிப்பீட்டில் உணவுப்பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உணவு பூங்காவில் முதலீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் உட்புறசாலைகள், தண்ணீர் வசதி, மின்சார வசதி, சுற்றுப்பு றச்சுவர், எடைமேடை, சேமிப்பு கிடங்கு, குளிர்பதன கிடங்கு, ஆய்வுக்கூடம், கேண்டீன் மற்றும் கனியவைத்தல் அறை ஆகியவை ஏற்படுத்தப்படவுள்ளது. எனவே, விருப்பமுள்ள உணவுப்பொ ருள் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், இது தொடர்பான கூடுதல் விவரங்களை சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள சேலம்  விற்பனைக்குழு செயலாளர் அலுவல கத்தினை தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.