tamilnadu

img

கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள்

மதுரை, மார்ச் 5-  சேலம் பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் சாதி ஆணவக்கொலை வழக்கில்  யுவராஜ் உள்பட 10 பேர் குற்ற வாளிகள் என்று மதுரை மாவட்ட வன்கொடு மை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள் ளது. தண்டனை விவரம் மார்ச் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சேலம் ஓமலூரைச் சேர்ந்த பட்டியல் சமூ கத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம் நாமக்கல் லைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தைச் சுவாதியும் காதலித்து வந்தனர். படிப்பு முடிந்தபின் இருவரும் திரு மணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். 2015-ஆம் ஆண்டு ஜூன்-23-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வ தாக கூறிவிட்டுச் சென்ற கோகுல்ராஜ், இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவ ரின் பெற்றோர் தேட ஆரம்பித்த னர். மறுநாள், நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக பிணமாகக் கிடந்த கோகுல்ராஜின் நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது.

இந்தக்கொலை தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. குற்றவாளிகளை கைது செய்து, தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராடின. இதனையடுத்து இந்த வழக்கில் சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் தலைமறைவாக இருந்தார். சாதி ஆணவப் படுகொலையான இதை தீவிரமாக விசாரித்து வந்த திருச்செங்கோடு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுப்ரியா, மேலதிகாரிகள் நிர்ப்பந்தம் காரணமாக  தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன்பின் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, விசாரிக்கப்பட்டு, நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட்.30-ஆம் தேதி விசாரணை ஆரம்பமானது.

அரசு வக்கீலாக சேலத்தைச் சேர்ந்த கருணாநிதியும் யுவராஜ் தரப்பின் வழக்கறிஞராக  மதுரை ஜி.கே. என்ற கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூவும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடி வந்தனர். இந்த வழக்கில் மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந் தன. அதில் முக்கியமான சாட்சி, கோகுல் ராஜின் காதலி சுவாதி. இவரும் கோகுல்ராஜும் திருச்செங்கோடு கோவில் மலையடிவாரத்தில் பேசிக் கொண்டிருந்த போதுதான், யுவராஜ் மற்றும் அவரது ஆட்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் கோகுல்ராஜ். இந்த  வழக்கில் பல அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறின. இந்நிலையில் இவ்வழக்கினை கோகுல்ராஜ் தாய் சித்ரா தாக்கல் செய்த மனு வின் அடிப்படையில்,  நாமக்கல் நீதிமன்றத்தி லிருந்து, மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அரசு வழக்கறிஞராக ப.பா.மோகன் கோகுல்ராஜின் தாய் சித்ராவின் வேண்டுகோள்படி நியமிக்கப்பட்டார். அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த  வழக்கில் நீதிபதி சம்பத்குமார் மார்ச் 5  சனிக் கிழமையன்று தீர்ப்பளித்தார். அப்போது யுவ ராஜ் உள்ளிட்ட 15 பேர் நேரில் ஆஜர்படுத்தப் பட்டனர். இதில் 2 பேர் ஏற்கெனவே இறந்து விட்டனர். 

நீதிபதி அளித்த தீர்ப்பில், குற்றம் சாட்டப் பட்டவர்களான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ்,அவரது சகோ தரர்கள் அருண், குமார் மற்றும் சதீஸ்குமார்,  ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு,  கிரிதர் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என்றும்  சங்கர், அருள்செந்தில், செல்வகுமார் தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்படுவதாகவும் உத்தரவிட்டார். குற்றவாளிகள் 10 பேருக்குமான தண்ட னை விபரம் மார்ச்  8ஆம் தேதி அறிவிக்கப் படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது வழக்கில் தொடர்புடைய ஜோதி மணி என்ற பெண் உயிரிழந்த நிலையில், தலை மறைவாக இருந்த அமுதரசு என்பவரின் மீதான வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நடை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து உயர் நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட அரசு வழக்கறிஞர் ப. பா. மோகன் கூறுகையில், இந்த வழக்கில் அரசு தரப்பில் 106 சாட்சியம் மற்றும் நீதிமன்ற தரப்பில் இரு சாட்சியங்கள் என 108 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப் பட்டு, 500-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் குறியீடு செய்துள்ள நிலையில் அதில் சிசிடிவி உட்பட 100-க்கும் மேற்பட்ட ஆவணப்பொருட் கள் சமர்பிக்கப்பட்டன. பிறழ்சாட்சியம் அளிக்கப்பட்ட இந்த வழக்கில் 10 பேர் குற்ற வாளியாக கண்டறியும் வகையில் வாதாடியுள்  ளோம். மார்ச்  8ஆம் தேதி நீதிமன்றம் தண்டனை விவரம் அறிவித்தவுடன் தீர்ப்பு நகலை பெற்றுக் கொண்டு விடுதலை செய்யப் பட்ட ஐந்து பேருக்கும் தண்டனை பெற்றுத் தரும் முறையில் மேல் முறையீடு செய்ய லாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்வோம் என்றார்.

தூக்கு தண்டனை அளிக்க வேண்டும்

கோகுல்ராஜின் தாயார் சித்ரா  கூறுகை யில், 10 பேரை குற்றவாளியாக அறிவித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தீர்ப்புக் காக உயிரோடு காத்திருந்தேன். 10 பேருக்கும் தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும்  என எதிர்பார்க்கிறேன் என்று கண்ணீர் மல்க கூறினார். கோகுல்ராஜின் சகோதரர் கலைச்செல் வன்  கூறுகையில், கோகுல்ராஜ் இறந்த பிறகு எங்கள் குடும்பத்திற்கு பல்வேறு வகையில் சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எங்களுக்கு தகுந்த பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். மேலும் இந்த விஷயத்தில் எங்களுக்காக போராடிய அரசியல் கட்சிகள் மற்றும் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார் 

அரசு வேலை வழங்கிடுக!

கோகுல்ராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பார்த்திபன் கூறுகையில், இந்த விஷயத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டால் அந்த பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு அரசு  வேலை அளிக்க வேண்டும். அதை கோகுல் ராஜின் சகோதரர் கலைச்செல்வனுக்கு தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் அரசு  வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி னார்.          (ந.நி.)