tamilnadu

img

ஊடகச் சந்திப்பில் மீண்டும் அநாகரிகப் பேச்சு

சென்னை, ஜன.20- ஊடகச் சந்திப்  பில் மீண்டும் அநாகரி கமாகப் பேசிய பாஜக  தலைவர் அண்ணா மலை பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் தமிழ்நாடு  மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை, சமீபத்திய பத்திரிகையாளர் சந்  திப்பில், ஊடக நெறியாளர் குறித்து அநா கரிகமாக பேசியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

பத்திரிகையாளர் கார்த்திகைச் செல்  வன், செய்தியாளராக பல நிலைகளில் பணியாற்றி, தற்போது ‘நியூஸ் 18-  தமிழ்நாடு’ தொலைக்காட்சி நிறுவனத் தின் நிர்வாக ஆசிரியராக உள்ளார். பல்வேறு தலைப்புகளில் விவாத நிகழ்ச்சி களையும், நேர்காணல்களையும் நெறி யாள்கை செய்வதில் தனக்கென்று தனிப்  பாணியை உருவாக்கி நற்பெயர் எடுத்த வர். அவரை நோக்கி முற்றிலும் அநாகரி கமாக, தனிப்பட்ட முறையில் தாக்கிப்  பேசுவதற்கான அதிகாரத்தை அண்ணா மலைக்கு யார் கொடுத்தது? அவர் சார்ந் துள்ள பாஜக, ஒன்றிய அரசாக உள்ளது என்பது தரமற்று பேசுவதற்கான உரி மத்தை வழங்குகிறதா? இந்த அநாகரிக நடத்தையை பத்திரி கையாளர்கள் சங்கங்கள் கண்டித்துள்ள பிறகும், அண்ணாமலை தனது பேச்சை நியாயப்படுத்தியுள்ளார்.

கொங்கு பகுதி  மக்களையும், கிராமப்புற மக்களையும் அதற்கு ஆதரவாக குறிப்பிட்டு அவ மதித்துள்ளார். பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பின்னர், இதுபோல அநாகரிகமாக பேசுவதும், ஊடகங்களை தரந்தாழ்ந்து விமர்சிப்பதும் இது முதல்முறை அல்ல.  ஊடக நிருபர்கள் குரங்கு போல் தாவு கிறார்கள் என்றார்; தனது ரபேல் கைக்கடி காரத்திற்கு கணக்குக்காட்ட முடியாத போது புதிய தலைமுறை நிருபரை நோக்கி அநாகரிகமாக கூச்சலிட்டார்; ஊடக நிருபர்களை நோக்கி பணம்  வாங்கிக் கொள்ளுங்கள் என செய்தியா ளர் சந்திப்பிலேயே பேசி அவமதித்தார்.

இதுபோல வேண்டுமென்றே தொடர்ந்து கண்ணியமற்று பேசிவரும் அண்ணா மலை இப்போது அநாகரிகத்தின் உச் சத்திற்கே சென்றுள்ளார்.  மாறுபட்ட கொள்கைகள் இருந்தா லும், கண்ணியம் தவறக் கூடாது என்பது அரசியல் நியதி. பாஜக-வும், அதன் தலை வரும் இந்த நியதிகளுக்கெல்லாம் அப்  பாற்பட்டவர்களாக தங்களைக் கருதிக் கொள்கின்றனர். அண்ணாமலையின் இந்தப் போக் கினை வன்மையாகக் கண்டிப்பதுடன்,  பொதுவெளியில் இவ்வளவு தரம் தாழ்ந்து  பேசியதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக்கேட்க வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் குறிப்  பிட்டுள்ளார்.