tamilnadu

எதிர்க்கட்சி துணைத் தலைவர் வழக்கு

சென்னை, நவ.10- எதிர்க்கட்சி துணைத் தலை வராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரிய வழக்கில், வரும் டிச.12 ஆம் தேதிக்குள் சட்ட மன்ற செயலாளர், பேரவைத் தலை வர் ஆகியோர் பதிலளிக்க சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், “எதிர்க்கட்சி தலைவராக நானும், துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். அதன்பிறகு, ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்தி லிங்கம் ஆகியோர் கட்சியில் இருந்து  நீக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, 2022 ஆம்  ஆண்டு, ஜூலை 17-ல் கட்சியின்  எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார், துணைச்  செயலாளராக அக்ரி கிருஷ்ண மூர்த்தி நியமித்து பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பி வைத்தோம். 5 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.

எனவே, கட்சியில் இருந்து சட்டமன்ற பதவிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அங்கீகரிக்க, பேரவைத் தலைவர் மற்றும் சட்டமன்ற செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா  சுமந்த் முன்பு வெள்ளிக்கிழமை (நவ.10) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு சட்ட மன்ற செயலாளர், பேரவைத் தலை வர் ஆகியோர் வரும் டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தர விட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கே தள்ளி வைத்தார்.