tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘குண்டர்’ சங்கர்

சென்னை,மே 12- பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தர விட்டுள்ளார். 

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியது உள்பட 7 வழக்கு களில் சவுக்கு சங்கர் கைது செய்யப் பட்டுள்ளார். 

தற்போது கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சவுக்கு சங்கரை   குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க  சென்னை பெருநகர காவல் ஆணை யாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தர விட்டார். இதற்கான குண்டர் தடுப்புக் காவல் அறிக்கை. கோயம்புத்தூர் சிறை யில் உள்ள சவுக்கு சங்கருக்கு மே 12  அன்று  சென்னை காவல், மத்திய குற்றப் பிரிவு, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் வழங்கப்பட்டது. 

சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும். மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய உறுப்பினர்க்கு 30% பயிர்க்கடன்

சேலம்,மே 12- தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பை யன், அனைத்து மண்டல இணை பதி வாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் நடப் பாண்டு கூட்டுறவு அமைப்புகள் மூலம், ரூ.16,500 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

பயிர்க்கடனில் 30 சதவீதம் புதிய உறுப்பினர்களுக்கும், 20 சதவீதம் பட்டியலின வகுப்பு விவசாயி களுக்கும் வழங்குவதை உறுதி செய்யவேண்டும். பட்டியலின வகுப்பு, பழங்குடியினரின் நில உட மையின் அடிப்படையில், 20 சதவீதம் குறியீட்டினை தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கங் களுக்கு நிர்ணயம் செய்யவேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டிற்கு மேலாகவும் தேவைப்படும் நேர்வில், தகுதியான விவசாயிகளுக்கு வங்கி கள் ஒழுங்குமுறை விதிகளை பின் பற்றி பயிர்க்கடன் வழங்கவேண்டும். 

பயிர்க்கடனில் அதிகளவில் தகுதியுள்ள விவசாயிகள் பயன் பெறு வது உறுதி செய்யப்பட வேண்டும். பயிர்க்கடன் வழங்குவதில் எவ்வித புகாரும் இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை அருகே விபத்து
அமைச்சர் எ.வ.வேலு மகன் உட்பட 4 பேர் படுகாயம்

திருவண்ணாமலை, மே. 12- தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பன் உள்ளிட்ட 3 பேர் திருக்கோவிலூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.  ஏந்தல் புறவழிச்சாலை நான்குமுனை சந்திப்பில் விழுப்புரம் நோக்கி சென்ற காரும், அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பன் சென்ற காரும் மோதின. இதில் கம்பன் சென்ற கார் உருண்டு பலத்த சேதமடைந்த நிலையில், படுகாயமடைந்த கம்பன், அவரது கார் ஓட்டுநர் ஆனந்தன், உதவியாளர் பரசுராமன் உட்பட மூவரும் மீட்கப்பட்டு, தென்மாத்தூரில் உள்ள அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றொரு காரில் இருந்த சென்னை அயப்பாக்கம் பகுதியில் வசிக்கும் சுந்தரமூர்த்தியும் படுகாயமடைந்த நிலையில், அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.