சிதம்பரம்,நவ.17- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காதலியை கத்தியால் குத்திய காதலனை காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். காடம்புலியூர் அருகே உள்ள குட்டியாண்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் முத்தமிழ்(19) (பெயர்மாற்ற ப்பட்டுள்ளது). இவர் சிதம்பரம் அருகே உள்ள வடமூர் கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கி சிதம்பரத்தில் உள்ள சிப்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். உளுந்தூர் பேட்டை அருகே உள்ள களமருதூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜலிங்கம் மகன் சக்தி வேல் (23). இவரும் அதே கடையில் வேலை செய்தனர். இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியுள்ளது. இருவரையும் கடந்த 2 மாதத்துக்கு முன்பு வேலையில் இருந்து நிறுத்தி யுள்ளார் கடை உரிமை யாளர். வடமூர் கிராமத்தில் தங்கி யிருந்த அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்த சக்தி வேல், திடீரென முத்தமிழை கத்தியால் நெஞ்சில் குத்தி, கழுத்தை அறுத்துவிட்டு சிதம்பரம் தாலுகா காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதில் முத்தமிழுக்கு கழுத்து மற்றும் நெஞ்சு பகுதி ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது. முத்தமிழின் அலறலை கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிச் சென்று அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த னர். இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் மருத்துவ மனைக்கு சென்று முத்தமிழி டம் விசாரணை நடத்தினார். மேலும் இது குறித்து சிதம்பரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜன் மற்றும் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். சக்திவேல் மாற்று சாதியை சேர்ந்தவர் என்ப தால் காதலை மறுத்ததாக வும், இதனால் ஆத்திர மடைந்து கத்தியால் குத்திய தாக காவலர்கள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.