tamilnadu

img

கந்து வட்டி கொடுமையால் இளைஞர் தற்கொலை! காவல் நிலையத்தில் புகார்

கந்து வட்டி கொடுமையால் இளைஞர் தற்கொலை! காவல் நிலையத்தில் புகார்

சிதம்பரம், ஆக 25- சிதம்பரம் அருகே கோவிலாம்  பூண்டி கிராமத்தில் வசிக்கும் சண்முகம் மகன் ரகுராமன் (23)  ஞாயிறன்று இரவு அவ ரது வீட்டில் கந்துவட்டி கொடு மையால்  தற்கொலை செய்து கொண்டார் என கிள்ளை காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது தாய் செண்பக செல்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், அவரது மகள் திருமணத்திற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதி யில் வசிக்கும் சேகர் மனைவி கவிதா விடம் ரூ 2.5 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கியதாகவும்,  இதற்கு 10 நாளைக்கு  14 ஆயிரம்  வட்டி கட்டி வந்ததாகவும்,  கடந்த 5  ஆண்டுகளாக பல லட்சம் ரூபாய் வட்டியாக கொடுத்தும்  வட்டி கொடுக்க முடியாத  பட்சத்தில் வட்டியும், அசலையும் கேட்டு தொந்தரவு செய்தனர். இதுகுறித்து கிள்ளை காவல் நிலை யத்தில்  கந்து வெட்டி கொடுமையால் பாதிக்கப்படுகிறோம் என 4  முறை புகார் அளித்துள்ளதாகவும் ஆனால் காவல்துறையினர் அவ்வப்போது பேச்சு வார்த்தை நடத்தி பணத்தை கொடுக்க காலக்கெடு  வாங்கிக் கொடுத்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் கவிதா பணம் கொடுக்க வில்லை என்றால் உங்கள் வீட்டை எழுதிக் கொடுங்கள் என்று மிரட்டினார். இதுகுறித்து  காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது  சண்முகம் குடும்பத்தினரிடமிருந்து ரூ.2 லட்சம் அசல் பணத்தை வாங்கி கவிதாவிடம் கொடுத்துள்ளனர். மீதி பணம் கொடுக்க தாமதம் ஏற்பட்டதால் பணத்தைக் கேட்டு கவிதா அவரது உறவினர்கள் சத்யா,  காயத்ரி, அலெக்சாண்டர் ஆகிய 4  பேரும் மகனை நேரிலும், தொலைபேசியில் அழைத்தும்,  வாட்ஸ் அப்பில் மிகவும் கீழ்த்தரமாக பேசி மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ள னர். இதனால் என் மகன் அவமானம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்  என்றும் இதுகுறித்து கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும், காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் உடலை பெற்றுக்கொண்டோம் என்றார்.