tamilnadu

img

துப்புரவு பணி தனியார்மயத்திற்கு கண்டனம்

சென்னை, செப்.24 - 4 மண்டல துப்புரவு பணியை தனியார்மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து செவ்வா யன்று (செப்.24) ரிப்பன் மாளிகை முன்பு தொழிலாள ர்கள் மனித சங்கிலி நடத்தி னர். சென்னை மாநகராட்சி 15  மண்டலங்களை கொண்டது. இதில், 4, 5, 6, 8 மற்றும் 7ல் ஒரு பகுதி ஆகிய மண்ட லங்களை தவிர பிற மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியார்மய மாக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், 5 மற்றும் 6வது மண்டலங் களில் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் கொடுக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. மேலும், 4, 8, 7வது மண்டலத்தின் ஒரு பகுதியில் குப்பை அள்ளும் பணியையும் தனியார் மயமாக்க மாநகராட்சி முடி வெடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோர உள்ளது. இந்த நிலையில், 5, 6வது மண்டலங்களில் குப்பை அள்ளும் பணியை தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் எடுக்க செப்.24ந் தேதி கடைசி நாளாகும். எனவே, இந்த தனியார் மய நடவடி க்கைகளை முழுமையாக ரத்து செய்யக்கோரி மாபெ ரும் மனித சங்கிலி போரா ட்டத்தை சென்னை மாநக ராட்சி செங்கொடி சங்கம் நடத்தியது. அப்போது செய்தியா ளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.சீனி வாசுலு, “முதலமைச்சர் வாக்குறுதி அளித்தபடி என்யுஎல்எம் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர் களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 4 மண்டலங்களை தனியார் மயமாக்கு முழுமையாக கைவிட வேண்டும். தனி யார்மயத்தை கைவிடும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும். வேலை நிறுத்தத்திற்கும் செல் வோம்” என்றார். சங்கத்தின் தலைவர் ஜெ.பட்டாபி தலைமையில் நடைபெற்ற இந்த போரா ட்டத்தில் ஆ.பிரியதர்ஷினி எம்.சி., சிஐடியு மத்திய சென்னை மாவட்டத் தலை வர் எம்.தயாளன், நிர்வாகி கள் பி.சுந்தரம், ஆர்.அருள்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.