tamilnadu

சுதந்திரமான ஊடகங்கள் இல்லாததால் ஜனநாயகம் வெறுமையாக உள்ளது

கொல்கத்தா, ஜன. 6- “சுதந்திரமான பத்திரிகைகள் இன்மையால் நாட்டில் ஜனநாயகம் வெறுமையாக உள்ளது” என்று பிரபல  பத்திரிகையாளரும் அரசியல் பார்வை யாளருமான சசிகுமார் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மேற்கு வங்க நாளிதழான கண சக்தியின் 58-ஆவது நிறுவன தினத்தை யொட்டி நடைபெற்ற விழாவில் சசிகுமார் சிறப்புரையாற்றினார். அப்போது “ஜனநாயக அமைப்பில் பல்வேறு குரல்களும் கருத்துகளும் எப்போதும் வெளிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு சுதந்திர ஊடகம் அவசியம்.

ஆனால், அதிகாரத்துக்கு அல்லது அழுத்தங்களுக்கு அடி பணிந்து ஆட்சியாளர்களின் நலன்க ளுக்கு ஏற்ப பெரும்பாலான ஊட கங்கள் தெரிந்தோ தெரியாமலோ செயல்படுகின்றன என்பதுதான் இன் றைய அனுபவம்” என்று கூறினார். மேலும் ஜனநாயகத்தின் முக்கிய அம்சம் குடிமக்களுக்கு தகவல்களை தெரிவிக்கவும், தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் வாய்ப்புகளை உருவாக்குவது ஆகும். ஓட்டு மூலம் ஆட்சி அமைக்கும் முறை மட்டுமே ஜனநாயகத்தை முழுமைப் படுத்தாது. ஹிட்லர் போன்ற பாசிஸ்ட்டு கள் பேச்சுரிமை கொடுக்காமலேயே தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்தனர்.

அர சமைப்பு சாசனம் அனைத்து குடி மக்களுக்கும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை வழங்குகிறது. அதை இல்லாதொழிக்கும் அரசு, யுஏபிஏ போன்ற கொடூரமான சட்டங்களைப் பயன்படுத்தி பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்ட சிவில் உரிமைகளை மீறு கிறது” என்று சசிகுமார் தெரிவித்தார். மூத்த தலைவரும், கணசக்தி பப்ளிகேஷன்ஸ் தலைவருமான பீமன் போஸ் விழாவிற்கு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க மாநிலச் செயலாளர் முகம்மது சலீம் உள்ளிட் டோர் உரையாற்றினர்.