tamilnadu

img

வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெறுக

வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெறுக

வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சிபிஎம் சார்பில் வியாழனன்று (ஏப்.17) ஆவடியில் பகுதிக்குழு உறுப்பினர் எம்.ராபர்ட்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மூத்த தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாவட்டக்குழு உறுப்பினர் மா.பூபாலன், ஏ.அம்சா பாய், ஹாஜி எஸ்.சர்புதீன் (அனைத்துபள்ளி கூட்டமைப்பு),  மௌலவி. எம்.அப்துல் காதிர் ஸலாஹி (தமிழ்நாடு அரசு ஹாஜி, திருவள்ளூர் மாவட்டம்), ஏ.அப்துல் அஜீஸ் (மனிதநேய மக்கள் கட்சி மாணவரணி), கே.எம்.தியாகராஜன்,  எஸ்.வேம்புலி (சிபிஎம்) ஆகியோர் பேசினர்.

ஒன்றிய அரசின் வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சிபிஎம் சார்பில் வியாழனன்று (ஏப்.17) மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக திருவொற்றியூர் தெற்கு பகுதிக்குழு சார்பில் தாங்கல் பகுதியில்  சி.எம்.நவராஜ் தலைமையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன் எம்சி,  எஸ்.பாக்கியலட்சுமி, பி.சம்சுதீன், ஜாபர் உசேன் (இந்திய யூனியன் முஸ்லீக் லீக்), ஏ.எஸ்.தாரிப்முகமது (மனிதநேய மக்கள் கட்சி), எஸ்.மக்தூம்தாஜ் (அழைப்பொளி டிரஸ்ட்), எஸ்.நசீர் அகமது (தமுமுக), ஜி.குகன் (கல்விக்கழகம்), அப்துல் வாஹித் (வியாபாரிகள் சங்கம்) ஆகியோர் பேசினர்.