tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : எழுத்தாளர் நா.பார்த்தசாரதி நினைவு நாள்

எழுத்தாளர் நா.பார்த்தசாரதி 1932ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் நாள் பிறந்தார்.

இவர் புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதைஎழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன்,கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் ‘தீபம்’ நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளன.  இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித்தொடர்களாகவும் வந்துள்ளன. இவர் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். இவர் எழுதிய “சாயங்கால மேகங்கள்” எனும் நூல்தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. 93 நூல்களை எழுதியிருக்கிறார். நா.பா. 1987ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் மரணமடைந்தார்.