சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 8 வில்லிவாக்கம் பகுதியில் உள்ளது சிட்கோநகர். இதில் கிழக்கு சிட்கோ நகர் பேஸ் 1, 2இல் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 1981ஆம் ஆண்டு உலக வங்கி திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் ஏரியில் உருவானது தான் இந்த நகர். இங்கு பெரும்பாலும், ஏழை எளிய நடுத்தர குடும்பத்தினரும் தொழிலாளர்களும் வசிக் கின்றனர். இந்த பகுதிக்கென இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப் பட்டன. அவை முறையான பராமரிப்பில்லாமல் பழுதடைந்துள்ளன. மெட்ரோ வாட்டர் குடிநீர் விநியோகம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டுவிட்டது. இப்போது லாரிகள் மூலம் ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும் முறையான மழைநீர் கால்வாய்கள் இல்லாத தால் மழைக்காலங்களில் சாலைகளில் வெள்ளம் தேங்கி நிற்கும். கழிவுநீர் கால்வாய் களும் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப குழாய்கள் மாற்றப்படாததாலும் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு சாலையிலேயே கழிவுநீர் தேங்குகிறது. மேலும் இப் பகுதி மக்களின் தேவைக்காக குடியிருப்பு உருவாகும் போதே கட்டப்பட்ட சமுதாயக் கூடம் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதுகுறித்து சிட்கோநகர் பேஸ் 1 செய லாளர் கிருஷ்ணமூர்த்தி, பா.டில்லிபாபு ஆகி யோர் கூறுகையில், லாரிகள் மூலம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு லாரிகள் வருவதில்லை. இதனால் தண்ணீர் லாரி எப்போது வரும் என காத்தி ருக்க வேண்டியுள்ளது. வேலைக்கு செல்வோர் சிலர் இதற்காக விடுமுறை எடுக்க வேண்டி யுள்ளது.
தபால் நிலையம் கட்டப்படுமா?
தபால் நிலையம் அமைப்பதற்காக 1981ஆம் ஆண்டு நிலம் ஒதுக்கப்பட்டது. அதற்கான பணமும் கடந்த 1991ஆம் ஆண்டு செலுத்தப் பட்டு விட்டது. உடனே வெறும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை தபால் நிலையம் கட்டப்படவில்லை. இதனால் அந்த இடம் தபால் நிலையத்திற்கென இடம் ஒதுக்கியும் இதுவரை தபால் நிலையம் கட்டி முடிக்கப்படவில்லை. அந்த இடம் குப்பை கொட்டும் இடமாகவும், குடிகாரர்களின் திறந்தவெளி மதுக்கூடமாகவும் மாறிவிட்டது. தற்போது மார்கெட் பகுதியில் வாடகை கட்டடத்தில் முதல் தளத்தில் தபால் நிலையம் செயல்படுகிறது. இதனால் முதியவர்கள் செல்லமுடியாமல் அவதிப்படுகிறார்கள்.
சமூகவிரோத செயல்கள்
3ஆவது பிளாக்கில் அமைந்துள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் அங்குள்ள கணினிகள் திருடப்பட்டன. மேலும் சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. இங்குள்ள சமுதாயக் கூடம் மூடப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இந்த பகுதி மக்கள் தங்கள் வீட்டுத் திருமணம், காதனி விழா, பிறந்தநாள், நிச்சயதார்த்தம், வளை காப்பு போன்ற நிகழ்ச்சிகளை குறைந்த செல வில் இங்கு நடத்தி வந்தனர். இப்போது மூடப்பட்டு விட்டதால் தனியார் திருமண மண்டபங்களை நாடி அதிக கட்டணத்திற்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரசு உடனடியாக இந்த சமுதாயக் கூடத்தை புதுப்பித்துக் கட்ட வேண்டும். 3ஆவது பிளாக்கில் உள்ள பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து, குடிநீர் வசதி செய்து தர வேண்டும். மழைநீர் கால்வாய் அமைத்து அதை முறை யாக பராமரிக்க வேண்டும். மின் இணைப்பை கேபிள் மூலம் வழங்க வேண்டும். சாலைகளை முறையாக பராமரிக்க வேண்டும். இந்த பகுதி யில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குழாய் களை சீரமைக்க வேண்டும். குறித்த நேரத்தில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். தபால் நிலைய கட்டத்தை உடனடியாக கட்ட வேண்டும். பூங்காவிற்கென ஒதுக்கிய இடத்தில் பூங்கா அமைத்து, நடைபாதை அமைக்க வேண்டும் என்றனர்.
மின்சார ரயில்களை இயக்கிடுக
பேஸ் 2 அகத்தியர் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் ஜி.அன்பழகன் கூறுகை யில், 1981ஆம் ஆண்டு கட்டப்பட்ட குடிநீர் மேல் நிலை தொட்டி கடந்த 15 ஆண்டுகளாக செயல்படவில்லை. தற்போது அவை இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அதை இடித்து விட்டு புதிய மேல்நிலைத் தொட்டி அமைத்து குடிநீர் விநியோகத்தை உறுதிப்ப டுத்த வேண்டும்.எனவே மழைநீர் கால்வா யில் கழிவு நீர், ரசாயணக் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் கால்வாயின் மேல்பகுதியை மூட வேண்டும். அதேபோல் இந்த பகுதியில் உள்ள அண்ணாநகர் ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் ரயில்களை இயக்க வேண்டும். அதை கோயம்பேடு வரை நீட்டிக்க வேண்டும். அப்படி செய்தால் கோயம்பேடு பேருந்து நிலையம், மார்க்கெட் மற்றும் சென்னைக்கு செல்வதற்கு வசதியாக இருக்கும் என்றார்.
சியாளம் தெரு
கிழக்கு சியாளம் சாலையில் சுமார் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த சாலை வழியாக ஏன்சிஸ் எனப்படும் மழைநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் ரயில்வே சுற்றுச்சுவர் அருகே சாலை யிலேயே கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டுள் ளன. குடிநீர் தொட்டிகள் அனைத்தும் கால் வாய் அருகிலேயே உள்ளன.
தரையோடு தரையாக உள்ள கால்வாயால் விபத்து
இதுகுறித்து அந்த பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாளர் எஸ்.கோபால கிருஷ்ணன் கூறுகையில், இந்த கால்வாயை முன்பு ஐசிஎப் நிர்வாகம் பராமரித்து வந்தது. இப்போது சென்னை மாநகராட்சியிடம் ஒப்ப டைத்து விட்டதாக நிர்வாகம் கூறுகிறது. மேலும் நிர்வாகம் இந்த கால்வாய் நீரை தூய்மை செய்வதாகக்கூறி கால்வாயின் நடுவில் தடுப்பு போட்டது. முறையாக அதில் வரும் குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்தாததால் அவை அந்த தடுப்பில் தேங்கி கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கால்வாய் சுமார் 8 அடி ஆழம் கொண்டது. தரையோடு தரையாக கால் வாய் இருப்பதால் குழந்தைகளும், சைக்கிளில் செல்வோரும், முதியோரும் அவ்வப்போது கால்வாயில் விழுந்து விடுகின்றனர்.
சுகாதார சீர்கேடு
மேலும் அருகில் உள்ள நகரில் அமைக்கப் பட்டுள்ள பொதுக்கழிப்பிடத்தில் உள்ள கழிவு நீரும் இந்த கால்வாயில் விடப்படுகின்றன. இரவு நேரங்களில் கழிவு நீர் லாரிகள் இந்த கால்வாயில் கழிவு நீரை விடுகின்றனர். இத னால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தி யாகிறது, தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. கிணற்று நீரும் மாசடைகிறது. மின் வாரிய அச்சக முனையில் இருந்து வில்லி வாக்கம் ரயில் நிலையம் வரை செல்லக் கூடிய சாலையில் கட்டட இடிபாடுகளும், ஆலைக் கழிவுகளும் ஐசிஎப் நிர்வாகத்தால் கொட்டப்படு கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படு கிறது. பொதுத்துறை நிறுவனமே சுற்றுச்சூழல் மாசுக்கு வழிவகுக்கிறது. மாநகராட்சி நிர்வாக மும் அவற்றை அகற்றுவதில்லை.
கண்டுகொள்ளாத ஐசிஎப் நிர்வாகம்
இதுகுறித்து பலமுறை ஐசிஎப் நிர்வாகத்தி டம், மாநகராட்சியிடம் புகார் அளித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கால்வாயின் நீரோட்டத்தை தடுக்கும் நடவடிக்கையை நிர்வாகம் கைவிட வேண்டும், கால்வாயின் மேல்பகுதியை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டட இடிபாடுகளையும், ஆலைக் கழிவு களையும் அகற்றி, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றார்.
-அம்பத்தூர் எஸ்.ராமு