சென்னை,ஆக.6 - மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமைத்தொகை வழங்குவது குறித்த கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் என்று சமூக நலன்-மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அளித்த உறுதி யால் ஆகஸ்ட் 7 அன்று நடைபெற விருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப் படுவதாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. ஜான்சி ராணி, மாநிலப் பொதுச் செயலாளர் தோ.வில்சன் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: அனைத்து மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களின், குடும்பத் தலை விகளுக்கும் தமிழக அரசு அறி வித்துள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைப்பதை உறுதிப்படுத்தி டக்கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆகஸ்ட் 7 அன்று தமிழக முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. இக்கோரிக்கை தமிழக அரசின் கவனத்திற்கு சென்ற அடிப்படையில் ஆகஸ்ட் 6 அன்று காலை 10 மணி அள வில் தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச் சர் கீதாஜீவன், சங்கத் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்திருந்தார்.
அதன் பேரில் மாநில மாற்றுத்திற னாளிகள் நல இயக்குநர் அலுவல கத்தில் அமைச்சர் கீதாஜீவன் தலைமை யில் மாற்றுதிறனாளிகள் நல இயக்கு னர் கமல் கிஷோர் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. சங்கத் தலை வர்கள் பா.ஜான்சிராணி, தோ.வில்சன், கே.ஆர்.சக்கரவர்த்தி, பி.ஜீவா, பி.எஸ்.பாரதி அண்ணா ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இப்பேச்சுவார்த்தையின் போது அனைத்து மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்ப தலைவிகளுக்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது, எனவே அதை ஏற்பதாகவும். தமிழக முதல்வரின் துறை என்பதால் நேரடி யாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அமைச்சர் தெரி வித்தார். மேலும் இன்று நடக்க விருக்கும் போராட்டத்தை ஒத்தி வைக்கும்படியும் அமைச்சர் கேட்டு கொண்டார். அமைச்சரின் நம்பிக்கை அளிக்கும் வாக்குறுதியின் அடிப்படை யில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்தை மாநிலம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது குறித்த கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.