tamilnadu

img

பெண்ணின் வலது கை அகற்றம் ஏன்?

சென்னை,செப்.28- ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கை அகற்றிய பெண்ணின் உயிரை காக்கும்  முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் வலது கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜோதியை மருத்துவ  மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஜோதி என்ற பெண்ணுக்கு தவறான சிகிச்சை யால் கை எடுக்கப்படவில்லை. உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் கையை எடுக்க  வேண்டும் என அவரிடம் கேட்டு அதற்கு அவர்  ஒப்புதல் தெரிவித்த பின்னர் வலது கை அகற்றப்பட்டது. அந்த பெண் தன்னுடைய கணவரிடமே ஒப்புதல் தெரிவித்து தான் கையை எடுத்த தாக கூறினார். வெளியில் உள்ள மருத்துவர் களை அழைத்து வந்து சிகிச்சை குறித்து கேட்டறியலாம். எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை அழைத்து வந்து கூட காட்டுங்கள். பெண்ணுக்கு அளித்த  சிகிச்சை தவறு என்று சொன்னால் எந்த நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம். இது அரிய வகை நோய் என்று  தில்லியில் இருந்து அறிக்கை பெறப்பட் டுள்ளது. இதுகுறித்து, பெண்ணின் கணவரிடமும் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. கையை எடுக்க வில்லை என்றால் பெண் உயிரை காப்பாற்றி  இருக்க முடியாது என அவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொடுக்கும் மருத்துவ சேவை பத்தவில்லை என்றால் வேறு எந்த மருத்துவமனைக்கு செல்ல ஆசைப்பட்டாலும் அதற்கான மருத்துவ காப்பீட்டு செலவை நாங்கள் ஏற்கி றோம் என சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் தெரிவித்து விட்டோம். பெண்ணின் கணவர்  ஆதங்கத்தில் புகார் கூறியதாக தெரிவித்தார். அரசு மருத்துவமனையும் அதன் சேவை யையும் கொச்சைப்படுத்த நினைக்க வேண்டாம். அலட்சியம் நடந்தது தெரிய வந்தால் அதன் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து தான் வருகிறோம். அந்த  பெண்ணின் உயிரை காக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறோம். இது ஒரு அரிய வகை நோய், ரத்தம்  உறையும் தன்மையுடைய நோய் என்பது  கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் பாதிப்பு  அதிகரித்தால் அதற்கு தேவையான உபக ரணங்கள் வாங்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.