tamilnadu

img

பழங்குடியின மக்களுக்கு நலவாரிய அட்டைC

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் நடைபெற்ற பழங்குடி மக்களுக்கான சிறப்பு முகாமில் சாதிச் சான்று, ஆதார், குடும்ப அட்டை, நலவாரிய அட்டை ஆகிய அடிப்படை தேவைகளை வழங்க வேண்டும் என வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 8 பேருக்கு நலவாரிய புத்தகத்தை வட்டாட்சியர் வழங்கினார். இந் நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப. செல்வன், வட்டார செயலாளர் ரவிதாசன், நிர்வாகிகள் ஆர்.சிவாஜி, பி. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.