சென்னை, ஜன.3 - சென்னையில் செய்தியாளர் களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: ஜெ.என் 1 என்ற புதிய வகை கொரோனா வைரஸால் தமிழ் நாட்டில் 30 பேர் பாதிக்கப்பட்டுள் ளனர்.
எனவே, வயது முதிர்ந்த வர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.புதிய கொரோனாவால் பாதிக் கப்பட்டவர்கள் 4 நாட்களிலேயே குணமாகி விடுகின்றனர். தமிழ்நாட்டில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. யாரும் பதற்றம் அடைய வேண்டாம். 5,000 பேர் நியமனம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 1.67 கோடி பேரும், தொடர் சேவையில் 4 கோடி பேர் இதுவரை பயனடைந்துள்ளனர்.
தொழிற் சாலைகளில் உள்ள தொழிலாளர் களும் பயனடையும் வகையில் இத் திட்டத்தை விரிவுபடுத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். விரைவில் இத்திட்டம் தொடங்கி வைக்கப் படும். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2,242 கிராம சுகாதார செவிலியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 1,021 மருத்துவர்கள் தேர்வு தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத் தில் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, தற்போது கொரோனா கால பணிக்கு மதிப் பெண் வழங்கும் பணி நடந்து வரு கிறது.
ஜனவரி 20க்கு முன்பு இப்பணி முடிக்கப்படும். பணி ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். 983 மருந்தாளுநர்கள் தேர்வு செய்வதிலி ருந்து 2 வழக்குகள் முடிக்கப் பட்டுள்ளன. விரைவில் இவர்கள் பணி நியமனம் செய்யப்பட உள்ள னர். 1,200-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. சென்னை கிண்டியில் இம்மாத இறுதிக்குள் மூத்த குடிமக்களுக் கான தனி மருத்துவமனை திறக்கப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.