tamilnadu

img

சர்வாதிகார பாஜக ஆட்சியை மக்கள் தோற்கடிப்பது உறுதி..

சென்னை, ஏப்.2- தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் மூலம் ரூ. 6572 கோடி குவித்த பிரதமர் மோடி ஊழ லைப் பற்றி பேசுவதற்கு எந்த  அருகதையும் இல்லை என தமிழ்  நாடு காங்கிரஸ் கமிட்டி தலை வர் கு. செல்வப்பெருந்தகை பதி லடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:- கார்ப்பரேட்டுகளுக்கு ஆதர வாக பாஜக அரசு எப்போதும் செயல்பட்டதில்லை என்று பிர தமர் மோடி கூறியிருக்கிறார். 2019-ஆம் ஆண்டு நடைமுறை யில் இருந்த கார்ப்பரேட் வரி  40 விழுக்காட்டிலிருந்து 22  விழுக்காடாக குறைக்கப்பட் டது.

இதனால் அரசின் வருவாய்  ரூ. 4 லட்சத்து 57 ஆயிரம் கோடி யாக சரிந்துள்ளது. ஒரே ஆண்  டில் கார்ப்பரேட் வரி சலுகை யால் 1 லட்சம் கோடி ரூபாய் அள வுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட் டுள்ளது. அதேபோல், சர்வதேச ஆரா ய்ச்சி நிறுவனமான ‘ஆக்ஸ் பாம்’ நிறுவனம் 2023-இல் வெளி யிட்ட அறிக்கையின்படி மக்கள்  தொகையில் 10 விழுக்காடு கோடீஸ்வரர்கள், இந்தியாவின்  சொத்து மதிப்பில் 77 விழுக்காட்  டைக் குவித்து வைத்துள்ளனர். அதே நேரத்தில் 50 விழுக்காடு மக்கள் அதாவது 67 கோடி இந்தி யர்களின் சொத்து மதிப்பில் 1  விழுக்காடு தான் உயர்ந்துள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் மோடி யின் நெருங்கிய நண்பரான அதா னியின் சொத்து 2,229 விழுக்கா டும் அம்பானியின் சொத்து 400  விழுக்காடும் அதிகரித்திருக்கி றது. உலக கோடீஸ்வரர்கள் வரி சையில் 2014ஆம் ஆண்டு 609- ஆவது இடத்தில் இருந்த அதானி, இன்றைக்கு 13-வது  இடத்தில் உயர்வதற்கு யார் கார ணம்? யார் பொறுப்பு? மோடி ஆட்சியில் கார்ப்பரேட்டுகளே பயனடைந்தார்கள். எனவே, தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் மூலம் ரூபாய் 6572 கோடி குவித்த பிரதமர் மோடி ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.

அமலாக்கத்துறையின் சோதனைக்கு பிறகு, 32 கார்ப்ப ரேட் குழுமங்கள் பாஜகவுக்கு ரூ.335 கோடி நன்கொடையாக வழங்கியதற்கு ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.  அதேபோல், பாஜகவுக்கு 16  ஷெல் (போலி) கம்பெனிகள் ரூ. 419 கோடி நிதி அளித்துள்ளன. 2024 தேர்தலை எதிர்கொள்ள பாஜக நன்கொடையைக் குவித்துக் கொண்டு அராஜக வழிமுறைகளை தேர்தல் களத்தில் பின்பற்றி வருகிறது. இத்தகைய பாசிச, சர்வாதி கார ஆட்சி நடத்தி வருகிற பிரத மர் மோடிக்கு வருகிற மக்க ளவை தேர்தலில் மக்கள் உரிய  தீர்ப்பை வழங்கி ஜனநாயகத் தைக் காப்பாற்றுவார்கள் என்ற  நம்பிக்கை இன்றைக்கு ஏற்பட்டி ருக்கிறது. பாசிசம் வீழப் போகி றது. இந்தியா மீளப் போகிறது. இவ்வாறு செல்வப்பெருந் தகை தெரிவித்துள்ளார்.