tamilnadu

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் கேரள முதல்வருடன் பேசுவோம்: அமைச்சர்

சென்னை, டிச. 10 - முல்லை பெரியாறு அணை யில் ஆண்டு பராமரிப்புப் பணி களை மேற்கொள்வது குறித்து கேரள முதல்வருடன் நமது முதல்வர் பேசுவார் என்று அமைச் சர் துரைமுருகன் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணையில் மராமத்துப் பணிக்காக தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் கட்டு மானப் பொருட்களை மூன்று நாட்களுக்கு முன்பு இரு லாரிகளில் கொண்டுசெல்லும் போது வல்லக்கடவு என்ற இடத்தில், கேரள வனத் துறை  சோதனைச் சாவடியில் கட்டுமானப் பொருட்களைக் கொண்டுசென்ற இரு லாரிகளும் தடுத்து நிறுத்தப் பட்டன என்று செய்திகள் வரு கின்றன.

கேரள நீர்வளத் துறையிடம் (பொதுப்பணித் துறை) அனுமதி பெற்ற பின்னரே கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப் படுவதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஆனால், தங்களுக்கு இது குறித்து எந்தத் தகவலும் வராத தால், அவற்றை அனுமதிக்க மாட்டோம் என்று கேரள வனத் துறை, கட்டுமானப் பொருட்கள் கொண்டு சென்ற லாரிகளை முல்லை பெரியாறு பகுதிக்குள் அனுமதிக்கவில்லை என்று  கூறுகிறார்கள் என்று சட்டப்பேர வையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

 மேலும், நமது முதல்வரும் கேரள முதல்வரும் ஒரு நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.  எனவே, இந்த சந்திப்பின் போது, இந்த விவகாரம் குறித்து கேரள முதல்வருடன் பேச வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், முல்லைபெரியாறு அணையில் ஆண்டு பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளலாம்.  கேரள அரசு தடுத்து நிறுத்தக்கூடாது என்று உச்சநீதி மன்றம் வழி காட்டியிருக்கிறது. ஆனால், கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் நடந்திருக்கக் கூடாது. எனவே, கேரள முதல்வரிடம் இதுகுறித்து நமது முதல்வர் பேசுவார் என்றார்.